பேதி மருத்துவம்
நாம் எவ்வளவுதான் முன்
ஜாக்கிரதையாக உணவு
மற்றும் பழக்கவழக்கம் கொண்டிருந்தாலும், உடலின்
உள்
உறுப்புகளில் அவைகளை
இணைக்கக்கூடிய குழாய்களிலும் அழுக்குகள் காலப்
போக்கில் படிகின்றன.
இந்த அழுக்குகள் மெலிதாகப் படர்வதால் அவை
உடனே
நோய்களை உண்டாக்குவதில்லை. குடலை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டோம் என்றால், இந்த
அழுக்குகள் மெதுவாகப் பெருகி,
உடல்
பருமன்,
ஜீரணக்
கோளாறு
சர்க்கரை வியாதி, விஷஜ்வரம், உள்ளுறுப்புக் குழாய்களில் அடைப்பு, இந்திரியங்கள் என்று
சொல்லக்கூடிய கண்,
காது,
மூக்கு,
நாக்கு,
தோல்
ஆகியவைகளுக்கு செயல்திறன் குன்றுதல், மூச்சிழுப்பு, உடல்
வீக்கம், ரத்த
சோகை,
வயிற்றில் பூச்சிகள், கட்டிகள், உறக்கம் தொலைந்து போகுதல், உடல்நிறம் மற்றும் சக்தி
குறைநது விடுதல் போன்ற
நோய்கள் ஏற்படும்.
உடலில் தங்கும் கழிவுகள் , குடலில் நாள்பட்டு தங்கும் கழிவுகள், விஷ தன்மை உடைய டாக்சின்கள் போன்றவற்றை நீக்குவதற்கு (4) நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருத்துவம் மேற்கொள்ளலாம்.
பேதி செய்வித்தல்
பேதி மேற்கொள்ளும் நாளை தேர்ந்தெடுத்து
அன்று காலை எட்டு மணிக்குள் பேதி மருந்தை உள்கொள்ளவேண்டும்.. காலை முதல் மலை வரை கழியும்
சில நேரங்களில் வாந்தியும் வியர்வையும் உண்டாகும். சில நேரங்களில் அசதி இருக்கும் ஆகவே
ஓய்வு கிடைக்கும் நாட்களில் பேதி மருந்து உட்கொள்ளவேண்டும்.
பேதி மருந்து உட்கொண்ட பிறகு குளிக்க
கூடாது
பேதி மருந்து உட்கொண்ட முப்பது
நிமிடம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் கழிய ஆரம்பிக்கும். அவரவர் உடல்நிலை பொறுத்து
குறைந்தது நான்கு முதல் பதினைந்து முறை பேதியாகும். சில நேரங்களில் படபடப்பு, வயற்று
வலி, குமட்டல், வியர்வை, சோர்வு ஏற்படலாம். அச்சப்பட தேவை இல்லை. மதியம் வரை பேதி ஆகும்.
ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு
டம்ளர் வெந்நீர் குடிக்கவேண்டும் அல்லது மிளகு ரசம் செய்து குடிக்கலாம். வழக்கம் போல்
ரசத்தில் புளி சேர்க்கக்கூடாது புளிக்கு பதில் நாட்டு தக்காளி அல்லது எலும்பிச்சை புளிப்பிற்காக
சேர்த்துக்கொள்ளலாம்.
மிகவும் பசியாக இருந்தால் மதியம்
ஒருமணிக்கு ரசம் சாதம் உட்க்கொள்ளலாம்.
மாலை மூன்று மணிக்கு மேல் தயிர்
சாதம் சாப்பிட்டு பேதியை நிறுத்திக்கொள்ளலாம்.
குடல் சுத்தமான பிறகு தான் குளிக்கவேண்டும்
குளித்த பிறகு நன்றாக குழைத்த
உணவை மிளகு ரசத்துடன் கலந்து உட்கொள்ளவேண்டும்.
இரவு பசி ஏற்பட்டால் மோர்சாதம்
அல்லது அரிசி கஞ்சி சாப்பிடலாம்.
இரவு ஒன்பது மணிக்குள் உறங்க செல்லவும்
மறு நாள் காலை வழக்கம்போல் உணவு உட்கொள்ளலாம்
மூன்று வயதினர் முதல் என்பது வயதினர்
வரை பேதி மருந்து உட்கொள்ளலாம்.
பேதி மாத்திரை சென்னை போரூரில்
மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை அன்பர்களுக்கு நேரடியாக
அளிக்கப்படும்.
எங்களது முகவரி எண் நான்கு, ஆர்
ஈ நகர் மேற்கு, முதல் குறுக்கு தெரு, மருதர் கேசரி ஜெயின் ஹால், போரூர் குன்றத்தூர்
மெயின் ரோடு, ஒப்போ மொபைல் ஷோ ரூம் ஒட்டிய சந்து, (சங்கீதா கல்யாண மண்டபம் அருகில்)
தொடர்பிற்கு அலை பேசி எண்
94441 39824